search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspect"

    • வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்தல், பெயர்நீக்கல் பணிகளை பார்வையிட்டனர்
    • பணிகளை சரியான முறையில் செய்வது குறித்து உரிய ஆலோசனை

    கோத்தகிரி, 

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வாக்குச்சாவடி மையங்களில் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி ஜி.டி. ஆர். பள்ளி, அரவேணு சக்கத்த அரசு பள்ளி, கீழ்கோத்தகிரி அரசு பள்ளி போன்ற அரசு பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்தல் மற்றும் பெயர் நீக்குதல் சேர்த்தல் முகாம் நடந்தது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை யும் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் நீக்குதலில் ஈடுபட்டனர்.

    இதனை குன்னூர் கோட்டாட்சியர் பூசன குமார், கோத்தகிரி கோமதி ஆகியோர் அனைத்து வாக்குச்சாவடிகளையும் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான வேலைகள் சரியான முறையில் செயல்படுவது குறித்தும் ஆலோசனை வழங்கினர். 

    • திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • கமிஷனர் உத்தரவின் பேரில் இன்று காலை மாநகர நல அலுவலர் உணவு தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு இந்த காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 16 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 1200 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

    காலை உணவு திட்டத்திற்கு மேற்கு ரத வீதி நேருஜி நினைவு மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் உணவு கூடம் ஏற்பாடு செய்யப்பட்டு உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து 16 பள்ளிகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் இன்று காலை மாநகர நல அலுவலர் செபாஸ்டின் உணவு தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அட்டவ ணைப்படி அரிசி உப்புமா மற்றும் காய்கறியுடன் சாம்பார் தயாரிக்கப்பட்டு இருந்தது. இதனை சாப்பிட்டு ஆய்வு செய்தனர். மாணவ ர்களுக்கு வழங்கப்படும் உணவு, கவனமாகவும், தரமா னதாகவும் வழங்க வேண்டும். தொடர் மழை பெய்து வருவதால் சமையல் கூடத்தை எப்போதும் தூய்மை வைத்துக் கொள்ள அறிவுறுத்தினர்.

    • கோட்டை மாரியம்மன் கோவில் நுழைவு பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கோவிலை சுற்றி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
    • தற்போது நுழைவு வாயில்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் வேகமாக வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கோட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் கோட்டை மாரியம்மன் கோவில் நுழைவு பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கோவிலை சுற்றி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    அதனைத் தொடர்ந்து இன்று வருவாய்த்துறையினர் மற்றும் இந்து அறநிலைத்துறை மற்றும் திருத்தண்டர் சபை நிறுவனர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அந்த ஆய்வின் போது கோவிலின் நுழைவு பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டிடங்களின் தன்மை தொடர்பாகவும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், கோவிலில் ஒவ்வொரு திருவிழாவின்போதும் பல்லாயிரம் பேர் பொங்கல் இடுவார்கள். ஆனால் கோயிலில் ஏதும் அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக பக்தர்கள் வெளியேறும் வகையில் வாசல்கள் பெரிய அளவில் முன்பு இருந்தது.

    தற்போது நுழைவு வாயில்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் வேகமாக வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கடைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. கட்டிடங்கள் இடிந்து விடும் நிலையில் உள்ளதால் விபத்து சூழல் உள்ளது.

    எனவே இதுகுறித்து வருகிற 15-ந் தேதி அறிக்கையாக தயாரித்து சென்னை ஐகோர்ட்டில் சமர்ப்பிப்போம். பின்னர் கோர்ட் உத்தரவு படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புகழூர் நகராட்சியில் சாலைபோடும் பணிகள் ஆய்வு
    • மண் சாலைகளை தார் சாலைகளாக போடப்படும் பணி

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டுக்கு உட்பட்ட சுந்தரம்பாள் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயுடன் கூடிய சாலை போடப்படும் பணியினையும், சுந்தரம்பாள் நகர் வடக்கு (1,2,3) தெருக்கள் தார் சாலைகள் மற்றும் 23-வது வார்டுக்கு உட்பட்ட கணபதி நகர், வீனஸ் நகர் மற்றும் சிந்து நகர் பகுதியில் உள்ள மண் சாலைகளை தார் சாலைகளாக போடப்படும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் மலர்கொடி, நகராட்சி பணி மேற்பார்வையாளர் ரவி, நகர்மன்ற உறுப்பினர்கள் சுமங்கலி நந்தா, ராமு கணேஷ் ,நகராட்சி நிர்வாக அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு ஆய்வு

      வேலாயுதம்பாளையம்,  

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் பாண்டமங்கலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்கள் பரமத்தி வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை களப்பயணமாக பார்வையிட்டனர். 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பற்றி பாடம் உள்ளது. இந்த பாடங்களில் உள்ள பாடத்திட்டத்தின் செயல்பாடுகளின் விளக்கங்களை அறிந்து கொள்ள எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அறிந்து கொண்டனர். நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் குற்றவியல் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், துணை நீதிமன்றம், நீதிமன்ற பதிவு அறைகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை அறிந்து கொண்டனர். நீதிபதிகள் மாணவ, மாணவியர்கள் இடையே இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளை பற்றி விரிவாக கூறினார்கள். அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நீதிமன்ற வளாகத்தின் அனைத்து செயல்பாடுகளை பற்றி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த களப்பயணம் மாணவர்களின் இடையே தங்களது ஜனநாயக கடமை, சமூகப் பொறுப்புணர்ச்சியை தூண்டும் விதமாக அமைந்தது. இவர்களுடன் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி முதல்வர் நந்தினி மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் உடன் இருந்தனர். ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை பார்வையிட்டு வந்த மாணவ, மாணவியர்களை ஆர்.என். ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனத்தின் தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் டாக்டர் அருள், இன்ஜினீயர் சேகர், சம்பூரணம் மற்றும் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினார்கள்.

    • தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு இன்று நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய வந்தனர்.
    • முதலில் முருகன்குறிச்சி பகுதியில் உள்ள பாளையங்கால்வாய் பகுதிக்கு சென்று அதனை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு இன்று நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய வந்தனர்.

    பாளையங்கால்வாய்

    குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையில் கலெக்டர் கார்த்திகேயன், சட்டப்பேரவை செய லாளர் சீனிவாசன், உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் ரூபிமனோகரன், அண்ணாத்துரை, அருள், மோகன், ராமலிங்கம், விஸ்வநாதன், ஜெயக்குமார் மற்றும் நெல்லை மாநக ராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தனர்.

    முதலில் முருகன்குறிச்சி பகுதியில் உள்ள பாளை யங்கால்வாய் பகுதிக்கு சென்று அதனை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மேலப்பாளை யம் பகுதியை சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள், சட்டமன்ற உறுதிமொழி குழுவின் தலைவர் வேல்முருகனிடம் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது:-

    தாமிரபரணியின் கிளை ஆறாக ஓடக்கூடிய பாளயங்கால்வாய் சுமார் 42 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த கால்வாயானது நெல்லை மாவட்டம் பழவூர் கிரா மத்தில் தொடங்கி 14 கிலோ மீட்டர் பயணத்திற்கு பின்னர் மாநகர பகுதியான மேலப்பா ளையத்தை வந்தடைகிறது.

    சுமார் 800 ஆண்டுகள் பழமையான பெரிய பள்ளிவாசல் இந்த கரையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மாநக ரத்தின் 10 ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்கும், 57 குளங்களுக்கு நீர் ஆதாரமாகவும், கால்நடை களுக்கான முக்கியமான நீர் நிலை யாகவும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் பாளை யங்கால்வாய் திகழ்ந்து வருகிறது.

    இத்தகைய முக்கி யத்துவம் வாய்ந்த பாளை யங்கால்வாயை நெல்லை மாநகராட்சி மேலப்பா ளையம் மண்டலத்தில் பயணிக்கும் போது மாநகராட்சி கழிவு நீரோடையும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு களும் நேரடியாக கலக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நச்சுகேடாக உள்ளது. எனவே இந்த பாளையங்கால்வாயை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட வேல்முருகன் எம்.எல்.ஏ., பாளையங்கால் வாயை முழுவது மாக தூர்வார கூடுதல் நிதி ஒது க்கீடு செய்யவும், அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் கால்வாயில் கழிவு நீர் கலப்பதை முழுதும் தடுக்கும் முறை குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு உறுதியாக இருப்பதாக குழு தலைவர் வேல்முருகன் மனு அளித்தவர்களிடம் வலியுறுத்தினார்.

    பொருநை அருங்காட்சியகம்

    தொடர்ந்து சீவலப்பேரி சாலையில் அமைந்துள்ள விளையாட்டு கிராமத்தை பார்வையிட்ட உறுதிமொழி குழுவினர், ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் ரூ.33 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகத்தையும் ஆய்வு செய்தனர்.

    இதனை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் நாங்குநேரியில் உள்ள தொழில் பூங்கா, அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே உள்ள ஆவின் பால் பண்ணை, சந்திப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ்நிலைய கட்டுமானப் பணிகள், சுத்தமல்லி யில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக் கழகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகள், பேட்டை கண்டியப்பேரியில் அரசு மருத்துவமனை கட்டிட பணிகளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

    தொடர்ந்து இன்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நடை பெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

    • திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முணைய கட்டுமான பணிகள் நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் சிவராசு நேரில் ஆய்வு
    • ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது

    திருச்சி 

    திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முணையம் கட்டும் பணி மற்றும் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் ரூ.243.78 கோடி, கனரக சரக்கு வாகன முணையம் கட்டுமானப் பணி மற்றும் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.106.20 கோடி ஆக மொத்தம் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு, மாநகராட்சி ஆணையர், நகர பொறியாளர், ஒப்பந்ததாரர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணி களை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    பின்னர் எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் புதிதாக 9 . 90 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்துகட்டுமான பணிகளை தரமாக மேற்கொள்ளவும் விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் கொட்டப்பட்டு குளத்தில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதையுடன் கூடிய கலர் மின்விளக்குகள் அமைக்கும் பணி,குளத்தின் கரையை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

    சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புத்தூர் மீன் மார்க்கெட் பகுதியில் புதிதாக வணிக வளாகம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டார்கள்

    இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகரப்பொறியாளர் சிவபாதம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • உப்பில் அயோடின் கண்டறியும் ஆய்வு நடைபெற்றது
    • அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில்

    கரூர்:

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக எளிய முறையில் உப்பில் அயோடின் கண்டறியும் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினர் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் நடேசன் தலைமை வகித்தார். தாளாளர் கோதை நடேசன், செயலாளர் இன்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் துணை முதல்வர் ரதிதேவி வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக குளோபல் சமூக நலப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் சொக்கலிங்கம்,

    சிசிஐ தமிழ்நாடு மாநில தலைவர் - டிஎன்சிபிஇசி- ன் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு,

    தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளர் ரமேஷ், வேதியியல் ஆய்வாளர் அகிலன், குளோபல் சமூக நலப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன்

    ஆகியோர் கலந்து கொண்டு அயோடின் நுண்சத்து குறித்த விழிப்புணர்வு மற்றும் அயோடின் கலந்த உப்பினை கண்டறியும் பரிசோதனை ஆய்வையும் மாணவிகளிடையே நடத்திக் காட்டினார்கள்.

    முடிவில் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரமாபிரியா நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் கல்லூரி உள் தர கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிற துறை சார்ந்த துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவிகள் உட்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

    • மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • அதிகாரிகளை சந்தித்த விவசாயிகள், மழையால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து விளக்கிக் கூறினர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரத்தில் தொடர்ந்து பெய்த கோடை மழை காரணமாக சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் நஞ்சை வயல்களில் பயிரிடப்பட்டிருந்த எள் செடிகள் முற்றிலும் அழிந்து நாசமானது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் எள் பயிர் செய்யப்பட்டு பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை நேற்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி தலைமையிலான வேளாண் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின்போது அதிகாரிகளை சந்தித்த விவசாயிகள், மழையால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து விளக்கிக் கூறினர்.

    அதனை கேட்டுக்கொண்ட அதிகாரிகள், தா.பழூர் வட்டாரம் முழுவதும் சுமார் 700 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள எள் பயிர் முற்றிலும் சேதம் அடைந்து விட்டதாக, அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்யும் சூழ்நிலை இருப்பதால், மழையால் ஏற்படக்கூடிய சேதங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பின்னர் அரசுக்கு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உரிய நிவாரணம் கிடைக்க ஆவண செய்யப்படும் என்றும் உறுதியளித்தனர். ஆய்வின்போது வட்டார வேளாண்மை அலுவலர் செல்வகுமார், தென்கச்சிபெருமாள்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார், வேளாண்மை உதவி அலுவலர் செல்வப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பாளை மற்றும் மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட கடைகளில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
    நெல்லை:

    புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பாளை மற்றும் மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட கடைகளில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சசிதீபா அறிவுறுத்தலின்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், ராமசுப்பிரமணியன் தலைமையில் கடைகளில் திடீரென ஆய்வு நடத்தப்பட்டது.

    அப்போது மேலப்பாளையத்தில் ஒரு கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கடையில் இருந்த 1 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பெரும்பாலான கடைகளில் உணவு பொருட்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இதனைப் பாாத்த அதிகாரிகள் உணவுகளை மூடி வைக்குமாறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

    மேலும் காலாவதியான பொருட்களும் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரிககை விடுத்தனர்.

    வாசுதேவநல்லூர் அருகே காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
    சிவகிரி:

    வாசுதேவநல்லூருக்கு மேற்கே புளியங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வாசுதேவநல்லூர் அருகே உள்ள நாரணபுரம் மேற்கு தொடர்ச்சி மலை செல்லப்புள்ளி மெட்டு பகுதியில் நேற்று முன்தினம் திடீரென காட்டு தீ பிடித்தது.

    காற்று வேகமாக வீசியதால் தீ பரவும் வேகம் மிகவும் அதிகமாகி இருந்தது. காட்டு தீயில் ஏராளமான தாவரங்கள், மூலிகைகள், மூங்கில் மரங்கள் எரிந்தது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின் தலைமையில் சிவகிரி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய மூன்று வனச்சரகத்திற்கு உட்பட்ட 35 வனக்காவலர்கள் மூலம் தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு காட்டுத்தீ அணைக்கப்பட்டது.  

    இந்நிலையில் இன்று காலை முதல் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட மலைப் பகுதிகளை வனச்சரகர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
    சேலத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் மஞ்சள்நாதன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
    சேலம்:

    சேலம் 5 ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் மஞ்சள்நாதன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெட்ரோல், டீசலின் தரம் குறித்து அவர் ஆய்வு நடத்தினார்.

    பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் சண்முகம் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார். தொடர்ந்து தொழிலாளர் துறை உதவி ஆணையர் மஞ்சள்நாதன் ஊழியர்களிடம் தரத்தின் விவரங்கள் குறித்து கேட்டு அறிந்தார்.
    ×