உள்ளூர் செய்திகள்
கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2022-05-08 13:36 GMT   |   Update On 2022-05-09 02:10 GMT
சென்னையில் நேற்று ஒரு நாள் பாதிப்பாக 30 ஆக இருந்த நிலையில், இன்று 23-ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று 47-ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மட்டும் புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் நேற்று ஒரு நாள் பாதிப்பாக 30 ஆக இருந்த நிலையில், இன்று 23-ஆக குறைந்துள்ளது.

கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 499-ல் இருந்து 478-ஆக உள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 68 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதையும் படியுங்கள்.. அசானி புயல் எதிரொலி: சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Tags:    

Similar News