உள்ளூர் செய்திகள்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஒரு நாள் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாகவியல்துறை மற்றும் மாணவர் வழிபாட்டு மையம் சார்பில் ஒரு நாள் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில் சென்னை பிரிட்ஜ்மேன் குழுமத்தின் இயக்குனர் கார்த்திக் கலந்து கொண்டு மாணவர்கள் திறனை பல்வேறு கட்ட தேர்வுகள் மூலம் தேர்வு செய்தார். இம்முகாமில் 35 மாணவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக வணிக நிர்வாகவியல்துறை தலைவர் அந்தோணி சகாய சித்ரா வரவேற்புரை ஆற்றினார். வழிகாட்டு மையத்தின் இயக்குனர் சேகர் நன்றி கூறினார்.
மாணவர்களின் எதிர்கால வாழ்விற்காக நடத்தப்பட்ட இம்முகாமிற்கு ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராம்ராஜ், நிறுவன செயலர் நாராயணராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாகவியல்துறை மற்றும் மாணவர் வழிபாட்டு மையம் சார்பில் ஒரு நாள் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில் சென்னை பிரிட்ஜ்மேன் குழுமத்தின் இயக்குனர் கார்த்திக் கலந்து கொண்டு மாணவர்கள் திறனை பல்வேறு கட்ட தேர்வுகள் மூலம் தேர்வு செய்தார். இம்முகாமில் 35 மாணவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக வணிக நிர்வாகவியல்துறை தலைவர் அந்தோணி சகாய சித்ரா வரவேற்புரை ஆற்றினார். வழிகாட்டு மையத்தின் இயக்குனர் சேகர் நன்றி கூறினார்.
மாணவர்களின் எதிர்கால வாழ்விற்காக நடத்தப்பட்ட இம்முகாமிற்கு ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராம்ராஜ், நிறுவன செயலர் நாராயணராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.