உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மானூரில் பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

Published On 2022-05-02 09:35 GMT   |   Update On 2022-05-02 09:35 GMT
மானூர் அருகே உள்ள கம்மாளன்குளத்தில் பனைமரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள கம்மாளன்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் தாவீதன். இவரது மகன் கிருஷ்ணகுமார்(வயது 31).

இவர் பனையேறும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் அங்குள்ள இசக்கி அம்மன் கோவில் தெருவில்  பனை ஏறி கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுதொடர்பாக மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News