உள்ளூர் செய்திகள்
கருக்கம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா
அதிகாலை 4 மணியளவில் திரளான பெண்கள் உள்ளிட்டோர் கும்பம், கரகம் எடுத்து வந்து பொங்கல் வைத்தனர்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து சின்னேரிபாளையம் ஊராட்சி கருக்கம்பாளையத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டு 26-ந் தேதி இரவு கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. நேற்று(27ந் தேதி) அதிகாலை 4 மணியளவில் திரளான பெண்கள் உள்ளிட்டோர் கும்பம், கரகம் எடுத்து வந்து பொங்கல் வைத்தனர். தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
இதையடுத்து அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், மற்றும் கிடாவெட்டுதல் ஆகியவை நடந்தது. இன்று பகல் 12 மணிக்கு தன்னாசியப்பன் பொங்கல் விழா நடைபெற்றது. நாளை மஞ்சள் நீர் விழா நடக்க உள்ளது. விழாவில் சின்னேரிபாளையம், கருக்கம்பாளையம், வளையபாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த திரளானோர் கலந்துகொண்டனர்.