உள்ளூர் செய்திகள்
பலியான சந்தோஷ்.

ஓமலூரில் இணையதள இணைப்பு கொடுக்க வந்த சேலம் வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

Published On 2022-04-22 07:56 GMT   |   Update On 2022-04-22 07:56 GMT
ஓமலூரில் இணையதள இணைப்பு கொடுக்க வந்த சேலம் வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.
ஓமலூர்:

சேலம் சின்னத்திருப்பதி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் தகவல் தொடர்பு படித்துள்ளார். தற்போது சேலத்தில் உள்ள தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 

இந்தநிலையில், ஓமலூர் அம்மன் நகரில் வசிக்கும் வேலன் என்பவர் தனது இல்லத்திற்கு இணையதள வசதி கேட்டு விண்ணப்பித்தார். இதனை தொடர்ந்து சந்தோஷ் சேலத்தில் இருந்து ஓமலூர் வந்து, வேலன் வீட்டிற்கு இணையதள வசதி செய்துகொடுத்து கொண்டு இருந்தார். 
அப்போது, அந்த இணையதள இணைப்பிற்கு மின்சார இணைப்பு கொடுக்கும்போது, திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கிவீசப்பட்ட சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார்,  சந்தோஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தோஷ் இறந்தது குறித்து தகவல் அறிந்த, அவரது உறவினர்கள் ஓமலூர் காவல் நிலையத்தில் குவிந்தனர். 

அவரது இறப்புக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.  முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News