உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

குடிபோதையில் 2 வயது குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை- மது அரக்கனுக்கு முடிவு கட்ட வேண்டும்: அன்புமணி

Published On 2022-04-19 11:16 GMT   |   Update On 2022-04-19 11:16 GMT
தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-

தூத்துக்குடி  தாளமுத்து நகரில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட மோதலில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்து கணவன் கொலை செய்த செய்தியறிந்து  அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குடி மனிதனை கொடூரனாக்கும் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம் ஆகும்.

அனைத்துக் குற்றங்களுக்கும் பிறப்பிடமாக விளங்குவது மது தான். கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்கும் மது தான் மூல காரணமாக இருக்கிறது. மது வணிகம் தொடரும் வரை, மனித குலத்துக்கு எதிரான  இத்தகைய கொடிய குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது.

குற்றங்கள் இல்லாத, அமைதியான தமிழகத்தை உருவாக்க  மதுவிலக்கு தான் ஒரே வழி ஆகும். அதனால் தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News