உள்ளூர் செய்திகள்
ஸ்ரீபகவதிஅம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
காட்டுப்புத்தூர் ஸ்ரீபகவதிஅம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் சந்தைப்பேட்டையில் உள்ள சாஸ்திரி நகரில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஸ்ரீராம சமுத்திரம் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். பின்பு முதல் மற்றும்2ம் கால யாகசாலைபூஜைகள், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், வாஸ்துசாந்தி, நவகிரக வழிபாடு, உள்பட பல வகையான யாகங்களும் ஹோமங்களும் நடைபெற்றது.
பின்பு ஸ்ரீ பகவதி அம்மன்கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.அதைத்தொடர்ந்துமகாதீபாராதனை காட்டப்பட்டது.
விழாவில் காட்டுப்புத்தூர் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பெண்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் சந்தைப்பேட்டையில் உள்ள சாஸ்திரி நகரில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஸ்ரீராம சமுத்திரம் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். பின்பு முதல் மற்றும்2ம் கால யாகசாலைபூஜைகள், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், வாஸ்துசாந்தி, நவகிரக வழிபாடு, உள்பட பல வகையான யாகங்களும் ஹோமங்களும் நடைபெற்றது.
பின்பு ஸ்ரீ பகவதி அம்மன்கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.அதைத்தொடர்ந்துமகாதீபாராதனை காட்டப்பட்டது.
விழாவில் காட்டுப்புத்தூர் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பெண்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர்.