உள்ளூர் செய்திகள்
.

கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-14 08:36 GMT   |   Update On 2022-04-14 08:36 GMT
சேலத்தில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் மாத ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமை தாங்கினார். மாநில தலைவர் பெரியசாமி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில், கட்டுமான தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பெண் தொழிலாளர்களின் ஓய்வு பெறும் வயதை 50 என்று நிர்ணயிக்க வேண்டும. விண்ணப்பித்த ஒரு வார காலத்துக்குள் நலத்திட்ட உதவிகள் கிடைக்க செய்ய வேண்டும். இ.எஸ்.ஐ., பி.எப். திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும். குழந்தைகள் கல்வி செலவை வாரியம் முழுமையாக ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Tags:    

Similar News