உள்ளூர் செய்திகள்
குமாரபாளையம் அருகே ராஜகணபதி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
குமாரபாளையம் அருகே ராஜகணபதி, மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கல்லாங்காட்டுவலசு வீரப்பம் பாளையத்தில் ராஜகணபதி மற்றும் சர்வ சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடை பெற்றது. விநாயகர் பூஜையுடன் 2 நாட்கள் யாக சாலை பூஜைகள் நடந்தது.
முன்னதாக காவிரி ஆற்றிலிருந்து மேளதாளத் துடன் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் நேற்று காலை 9 மணியளவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி விநாயகருக்கும், சர்வசக்தி மாரியம்மனுக்கும் சிறப்பான முறையில் மலர்களால் அலங்கரம் செய்யப்பட்டு விஷேச பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் கல்லாங்காட்டு வலசு, வீரப்பம் பாளையம் சுற்று வட்டார பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.