உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

துபாயில் முதலமைச்சருடன் ஏர்.ஆர்.ரகுமான் சந்திப்பு

Published On 2022-03-25 15:42 GMT   |   Update On 2022-03-25 15:42 GMT
துபாயில் நடந்து வரும் சர்வதேச தொழில் கண்காட்சிக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார்.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக நான்கு நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். அங்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் மர்ரி, வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி ஆகியோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடு மேற்கொள்வது  குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்பின்னர் துபாயில் நடந்து வரும் சர்வதேச தொழில் கண்காட்சிக்கு சென்றார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்காட்சியில் கலந்துக் கொள்வதற்காக துபாய் சென்றிருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்.. இனி அக்டோபர் 5-ம் தேதி தேசிய டால்பின் தினமாக கொண்டாடப்படும்- சுற்றுச்சூழல் அமைச்சர்
Tags:    

Similar News