உள்ளூர் செய்திகள்
கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2022-03-25 15:16 GMT   |   Update On 2022-03-25 15:16 GMT
சென்னையில் இன்று 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனாவால் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 38,025 ஆக நீடிக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக  குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 41 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 612 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இன்று ஒரே நாளில் 66 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 141 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 446 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால், கொரோனாவால் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 38,025 ஆக நீடிக்கிறது.

இதையும் படியுங்கள்.. ரசாயன ஆயுத பேச்சு கவனத்தை திசைதிருப்பும் தந்திரம்- அமெரிக்காவுக்கு ரஷியா கண்டனம்
Tags:    

Similar News