உள்ளூர் செய்திகள்
தமிழகத்துக்கு வருகை தரும் ஈழத்தமிழர்களுக்கு விரைவில் விடிவு காலம்- மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்துக்கு வருகை தரும் ஈழத்தமிழர்களுக்கு விரைவில் ஒரு விடிவு காலத்தை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இன்று நிதி அமைச்சரும், வேளாண்மை துறை அமைச்சரும் பதில் உரை வழங்கி மிக சிறப்பான முறையில் பேசி அமர்ந்துள்ளனர். அவர்களை பாராட்டுகிறேன்.
இலங்கை தமிழர்கள் பல்வேறு துன்பங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகி உள்ளனர். இந்த சூழலில் அங்கு பரிதவித்துக்கொண்டிருக்கிற இலங்கை தமிழர்கள் அண்மையில் தமிழகத்துக்கு வரும் செய்தியை நானும் பார்த்துள்ளேன்.
இது குறித்து நேற்று அதிகாரிகளை அழைத்து பேசினேன். மத்திய அரசிடம் அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்பு கொண்டு இதனை எப்படி கையாள வேண்டும் என்று சட்டரீதியாக பேசிக்கொண்டு இருக்கிறோம். விரைவில் இதற்கு ஒரு விடிவு காலத்தை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும்.
தமிழக சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இன்று நிதி அமைச்சரும், வேளாண்மை துறை அமைச்சரும் பதில் உரை வழங்கி மிக சிறப்பான முறையில் பேசி அமர்ந்துள்ளனர். அவர்களை பாராட்டுகிறேன்.
இலங்கை தமிழர்கள் பல்வேறு துன்பங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகி உள்ளனர். இந்த சூழலில் அங்கு பரிதவித்துக்கொண்டிருக்கிற இலங்கை தமிழர்கள் அண்மையில் தமிழகத்துக்கு வரும் செய்தியை நானும் பார்த்துள்ளேன்.
இது குறித்து நேற்று அதிகாரிகளை அழைத்து பேசினேன். மத்திய அரசிடம் அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்பு கொண்டு இதனை எப்படி கையாள வேண்டும் என்று சட்டரீதியாக பேசிக்கொண்டு இருக்கிறோம். விரைவில் இதற்கு ஒரு விடிவு காலத்தை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.