உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பட்ஜெட் தயாரிப்பு பணி - வார்டுகள்தோறும் ஆய்வில் ஈடுபடும் கவுன்சிலர்கள்

Published On 2022-03-18 08:02 GMT   |   Update On 2022-03-18 08:02 GMT
முதல் மாமன்ற கூட்டம் ஒரு வாரத்துக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெரும்பாலான கவுன்சிலர்கள் புதியவர்கள்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சிக்கு புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் அனைவரும் பதவியேற்று 2 வாரம் ஆன நிலையிலும்  இதுவரை மாமன்ற முதல் கூட்டம் இதுவரை நடத்தப்படாமல் உள்ளது. 

தற்போது நிதியாண்டு இறுதி என்பதால் வரும் 2022-23 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலர்கள் இந்த பட்ஜெட் தயாரிப்பு பணியில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:

முதல் மாமன்ற கூட்டம் ஒரு வாரத்துக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெரும்பாலான கவுன்சிலர்கள் புதியவர்கள். அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டு பகுதியில் உள்ள பிரச்னைகள், தேவைகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு விவரங்கள் சேகரியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளேன். அனைவரும் அதில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவரங்கள் மூலம் மக்கள் தேவைகள் குறித்து முதல் கூட்டத்திலேயே விவாதிக்க ஏதுவாக இருக்கும். அதனடிப்படையில் முதல் கூட்டம் முடிவு செய்து நடத்தப்படும். பட்ஜெட் கூட்டத்தைப் பொறுத்த வரை இன்று மாநில அரசு பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில், அதன் பின்னரே, மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நடத்தப்படும். மண்டல மற்றும் நிலைக்குழுக்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் என்றனர். 
Tags:    

Similar News