உள்ளூர் செய்திகள்
எஸ்.பி.வேலுமணி வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி உள்ளாரா?
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார்களா? என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் பல தடவை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
ஹாங்காங், மலேசியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், இங்கிலாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சென்றுள்ளனர்.
அதன்மூலம் ரூ.1.25 கோடி செலவிட்டுள்ளனர். வெளிநாடுகளில் அவர்கள் முதலீடு செய்துள்ளார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங், மலேசியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், இங்கிலாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சென்றுள்ளனர்.
அதன்மூலம் ரூ.1.25 கோடி செலவிட்டுள்ளனர். வெளிநாடுகளில் அவர்கள் முதலீடு செய்துள்ளார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.