உள்ளூர் செய்திகள்
.

ராசிபுரத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

Published On 2022-03-03 09:41 GMT   |   Update On 2022-03-03 09:41 GMT
போலீஸ் அதிகாரி ஒருமையில் பேசியதால் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
ராசிபுரம்:

ராசிபுரத்தை சேர்ந்தவர் வக்கீல் வி.குமார். இவர் பா.ஜ.க.வில் மாவட்ட பிரசார குழு துணைத்தலைவராக இருந்து வருகிறார். இவர் ராசிபுரம் போலீஸ் நிலையத்திற்கு அவரது கட்சிக்காரர் ஒருவரின் புகார் மனு தொடர்பாக சென்றார். அப்போது அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் வக்கீல் குமாரை மரியாதை குறைவாக ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ராசிபுரத்தில் உள்ள சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகிய 3 கோர்ட்டுகளையும் வக்கீல்கள் புறக்கணிப்பு செய்தனர்.
Tags:    

Similar News