உள்ளூர் செய்திகள்
கவர்னர் ஆர்என் ரவி - முதலமைச்சர் முக ஸ்டாலின்

75-வது நினைவு நாள்: காந்தி சிலைக்கு நாளை கவர்னர், முதல்வர் மரியாதை

Published On 2022-01-29 08:20 GMT   |   Update On 2022-01-29 08:20 GMT
மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு நாளை காலை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
சென்னை:

காந்தியடிகள் 75ஆவது நினைவு நாளானது தேச அளவில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த் தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் மாதம் 30-ம் நாள் “தியாகிகள் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது.

சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு நாளை காலை 10 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில் கவர்னர் ஆர்.என்.ரவி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.



Tags:    

Similar News