உள்ளூர் செய்திகள்
அரிவாள் வெட்டு

புரசைவாக்கத்தில் 2 வாலிபர்களுக்கு சரமாரி வெட்டு

Published On 2022-01-29 06:57 GMT   |   Update On 2022-01-29 06:57 GMT
புரசைவாக்கத்தில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை புரசைவாக்கம் ஆர்.கே.புரம் பிரிக்ளின் ரோடு அவுசிங் போர்டு பகுதியில் நேற்று இரவு 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டினார்கள். இதில் 2 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பெரம்பூரைச் சேர்ந்த தினேஷ் என்ற வாலிபருக்கு 8 இடங்களில் வெட்டு காயமும், புரசைவாக்கத்தைச் சேர்ந்த முருகனுக்கு 5 இடங்களில் வெட்டு காயமும் விழுந்தது.

இது தொடர்பாக தலைமை செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News