உள்ளூர் செய்திகள்
சி.ஐ.டி.யூ ஆர்ப்பாட்டம்.

தஞ்சையில் சி.ஐ.டி.யூ ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-27 10:05 GMT   |   Update On 2022-01-27 10:05 GMT
தஞ்சையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ சங்கத்தின் சார்பாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தக் வேண்டும், 

பஞ்சப்படி உயர்வு வழங்க வேண்டும், வரவுக்கும் செலவுக்கும் ஆன இடைப்பட்ட தொகையை மானியமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பணிமனை தலைவர் செங்குட்டுவன் தலைமையில் 
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மத்திய சங்க துணைத்தலைவர் வெங்கடேசன், பணிமனை செயலாளர் பழனிவேல் , துணைத்தலைவர் சத்யராஜ் பாரத்ராஜ் மற்றும் தஞ்சை மாவட்ட சி.ஐ.டி.யூ சங்கத்தின் துணைச் செயலாளர் அன்பு 
ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் ஓய்வு பெற்ற சங்கத்தின் மாநில துணை செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணிமனை பொருளாளர்  முருகேசன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News