உள்ளூர் செய்திகள்
.

பரமத்தி அருகே ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டில் பணம் திருட்டு

Published On 2022-01-25 10:04 GMT   |   Update On 2022-01-25 10:04 GMT
பரமத்தி அருகே ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டில் திருட்டு போனது.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள பில்லூரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 61). ஒய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அலுவலர்.  இவர் தற்போது கரூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

கடந்த 21ம் தேதி துரைசாமி பில்லூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் கரூர் சென்று விட்டார். இந்த நிலையில் பில்லூரில் உள்ள துரைசாமியின் சகோதரி லட்சுமி தண்ணீர் பிடிக்க துரைசாமியின் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த துரைசாமி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.9 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து துரைசாமி பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் 
செய்தார்.

புகாரின் அடிப்படையில் பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News