உள்ளூர் செய்திகள்
நெல்லை மாநகராட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
நெல்லை மாநகராட்சி தேரதல் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று பாளையில் மாவட்ட செயலாளர் தச்சைகணேசராஜா தலைமையில் நடந்தது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி தேர்தல், நாரணம்மாள்புரம், சங்கர்நகர் பேரூராட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையில் இன்று நடந்தது.
நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், ஆர்.பி.ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நெல்லை மாநகராட்சி மற்றும் நாரணம்மாள்புரம், சங்கர் நகர் பேரூராட்சிகளில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கட்சி நிர்வாகிகள் அவர்களை சமரசம் செய்தனர்.