உள்ளூர் செய்திகள்
மதுரை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை
திருச்சி ஸ்ரீரங்கம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகள் அர்ச்சனா(வயது 21). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்த நிலையில் விரக்தியுடன் காணப்பட்ட அர்ச்சனா கடந்த வாரம் மதுரை ஒத்தக்கடையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் எலிமருந்தை குடித்தார்.
சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அர்ச்சனா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது தாய் சாரதா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்ச்சனா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.