உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணாபுரத்தில் போலீசார் கொண்டாடிய சமத்துவ பொங்கல்
தமிழர்கள் திருநாளான பொங்கல் விழா நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில், கொரோனா கட்டுபாடுடன் அனைத்து போலீஸ்நிலையத்திலும் சமத்துவ பொங்கல் கொண்டாட வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்திரவு விட்டார்.
அதன்பேரில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காவல்துறையினர் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
அதே போல் கிருஷ்ணாபுரம் போலீஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அம்மாதுரை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கல்பனா, ரவி மற்றும் காவலர்கள் ஒன்றிணைந்து போலீஸ் நிலையம் முன்பு வண்ண கோலமிட்டு மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
பின்னர் இனிப்பு பொங்கல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.