search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Clay Pot"

    • பொங்கல் பண்டிகையின் போது மண் அடுப்பும், மண் பானையும் வைக்கப்பட்டு பொங்கல் வைப்பார்கள்.
    • மண்பாண்ட தொழிலாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்வதால் அவர்களது வாழ்வாதாரமும் உயரும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கத்தினர் நெல்லை மாவட்ட தலைவர் முருகானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட பொருளாளர் பிச்சாண்டி ஆகியோர் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மண் அடுப்பு

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது மண் அடுப்பும், மண் பானையும் வைக்கப்பட்டு பொங்கல் வைப்பார்கள். இதற்காக ரேஷன் கடைக ளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்போது அரசு சார்பில் மண்பானை, மண் அடுப்பு வழங்க வேண்டும்.

    அவ்வாறு செய்யும்போது மண்பாண்ட தொழிலாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்வதால் அவர்களது வாழ்வாதாரமும் உயரும். இது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.

    எனவே பொங்கல் தொகுப்புடன் மண்பானை மற்றும் மண் அடுப்பு வழங்க வேண்டும். மேலும் மண்பாண்ட தொழிலா ளர்களுக்கு மழைக்கால நிவாரணம் மற்றும் இலவச மின்விசை சக்கரம், கல்வி உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள், களிமண் எடுப்ப தற்கான ஆணை, தொழில் கடன் உள்ளிட்ட வழிவகை களை ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    பாளையை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்றி வருகிறார்.

    அவர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுனராக பணியில் சேர்ந்த நான் சுமார் ஒரு மாதம் மருத்துவ விடுப்பில் சென்றேன்.

    அதன் பின்னர் பணியில் சேர வந்தபோது கல்வித் துறை அதிகாரிகள் சிலர் வேண்டுமென்றே வருகை பதிவேட்டில் கையெழுத்து விடுவதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

    இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்கு மாறு உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரை கல்வித் துறை அதிகாரிகள் அதற்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறார்கள் என கூறி யுள்ளார்.

    மாணவ-மாணவிகள்

    மானூர் தாலுகா வாகை குளம் அருகே உள்ள செ.மருதபுரத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாண வர்கள் அந்த பகுதியில் வசிக்கும் ஊர் பொதுமக்க ளுடன் வந்து அளித்த மனுவில், மருதபுரம் கிராமத்தில் அம்மா விளை யாட்டு மைதானம் அமைக் கப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து போன்ற விளையாட்டுக்காக அவ்விடம் அமைக்கப் பட்டது. தற்போது அந்த இடத்தை பிரதம மந்திரி அவாஸ் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு வழங்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்து அளவீடு செய்து வருகின்றனர்.

    இதனை மாவட்ட கலெக்டர் தடுத்து நிறுத்தி மீண்டும் விளையாட்டு மைதானமாக தொடர வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    ×