உள்ளூர் செய்திகள்
சேலத்தில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
சேலத்தில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் செயின் பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி பெரியார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் மனைவி யமுனா (வயது 41). இவர் சேலம் ஆத்தூர் பைபாஸ் சாலையில் சன்னியாசி குண்டு அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் யமுனாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி மறைந்தனர்.
இதுகுறித்து யமுனா கிச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.