உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க.அவைத்தலைவர் வைஸ் பழனிச்சாமி, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த காட்சி.

அ.தி.மு.க. நிர்வாகி தி.மு.க.வில் இணைந்தார்

Published On 2022-01-05 08:59 GMT   |   Update On 2022-01-05 08:59 GMT
கடந்த 2011-2016ல் பல்லடம் நகராட்சி துணை தலைவராக வைஸ் பழனிசாமி இருந்தார்.
பல்லடம்:

பல்லடம் நகர அ.தி.மு.க. அவைத் தலைவராக இருப்பவர் வைஸ் பழனிச்சாமி. இவர் கடந்த 2011-2016ல் பல்லடம் நகராட்சி துணை தலைவராக இருந்தார். 

இந்தநிலையில் அவர், பல்லடம் நகர தி.மு.க. பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் ஏற்பாட்டில் திருப்பூர் தி.மு.க. மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்து சால்வை அணிவித்து தி.மு.க.வில் இணைந்தார். 

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல. பத்மநாபன்,பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெகதீஸ், இளைஞர் அணி ராஜசேகர், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் குட்டிப் பழனிச்சாமி, கௌஸ் பாஷா, ரத்தினசாமி, தங்கவேல், வேல்மணி, ஜாகீர், கயாஸ் அகமது, அபி மற்றும் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News