உள்ளூர் செய்திகள்
காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

திருமணமான 3 வாரத்தில் மாயமான புதுப்பெண் - காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

Published On 2021-12-30 06:54 GMT   |   Update On 2021-12-30 06:54 GMT
களியக்காவிளை அருகே திருமணமான 3 வாரத்தில் மாயமான புதுப்பெண் காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
களியக்காவிளை:

களியக்காவிளை அருகே அம்சிகாகுழி மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் அருள் பென்னட்(வயது30) இவர் மெது கும்மல் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருக்கும் களியக்காவிளை அருகே ஈந்திக்காலை பகுதியை சேர்ந்த ஷானு (20)என்ற பெண்ணுக்கும் கடந்த 25 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. சம்பவத்தன்று அருள் பென்னட் வழக்கம் போல் காலையில் தான் நடத்தி வரும் பல சரக்கு கடைக்கு சென்றுள்ளார். மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்த போது ஷானுவை காணவில்லை. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் தேடி உள்ளார் அங்கு ஷானுவை காணாததினால் ஷானுவின் பெற்றோரிடம் விசாரித்துள்ளார்.அங்கும் அவர் செல்லவில்லை என்பதால் சந்தேகமடைந்த அவர் இது குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வந்தனர்.

இந்நிலையில் ஷானு நேற்று தனது காதலன் களியக்காவிளை ஆர்.சி தெரு பகுதியை சார்ந்த கபரியேல் மகன் ஜெனிபர் (26) என்பவருடன் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். களியக்காவிளை போலீசார் அந்த இளம் பெண்ணின் கணவர் அருள் பென்னட், தாய் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.அப்போது ஷானு தனது காதலனுடன் செல்வதாக கூறி அடம் பிடித்ததினால் அவருடன் அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News