உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் மேலும் 605 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,00,927 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 605 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 44 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னையில் 172 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 88 பேருக்கும், செங்கல்பட்டில் 50 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் எதுவும் இல்லை. கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஒரே நாளில் 663 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து ஆயிரத்து 336 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,744 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 6,562 ஆக குறைந்துள்ளது.