உள்ளூர் செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் மேலும் 621 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-12-17 16:10 GMT   |   Update On 2021-12-17 16:10 GMT
தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,407 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை:

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 621 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 627 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் சரிந்துள்ளது. 

அதிகபட்சமாக இன்று சென்னையில் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 102 பேருக்கும், ஈரோட்டில் 48 பேருக்கும், செங்கல்பட்டில் 44 பேருக்கும், திருப்பூரில் 45 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 34 பேருக்கும், சேலத்தில் 37 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 38 ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 679 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 94 ஆயிரத்து 509 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,667 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 7,407 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றை கண்டறிவதற்காக கடந்த 24 மணி நேரத்தில் 1,05,974 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. 
Tags:    

Similar News