உள்ளூர் செய்திகள்
மாலைமலர் செய்தி எதிரொலி- பல்லடத்தில் ஆபத்தான குழி மூடல்
நகராட்சி பணியாளர்கள் குழியை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பல்லடம்:
பல்லடத்தில் 24 மணி நேரமும் பரபரப்பாக உள்ள என்.ஜி.ஆர்.ரோட்டில் இருந்து சர்ச்சுக்கு செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மேல் காரை பெயர்ந்து குழி ஏற்பட்டு இருந்தது. இதுகுறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதனைப்பார்த்த நகராட்சி ஆணையாளர் விநாயகம் உடனே நகராட்சி பணியாளர்களை அழைத்து அந்த அபாய குழியை மூடி சீரமைக்கும் படி உத்தரவிட்டார். இதையடுத்து நகராட்சி பணியாளர்கள் அந்த குழியை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.