உள்ளூர் செய்திகள்
மிதுன் சக்ரவர்த்தி

கோவை மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2021-12-14 06:36 GMT   |   Update On 2021-12-14 06:36 GMT
கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கோவை:

கோவையில் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் துன்புறுத்தலால் மனமுடைந்து தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதற்கு காரணமான பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியரையும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையர் பரிந்துரையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.   

இதையும் படியுங்கள்.. காதலன் ஏமாற்றியதால் 8 மாத கர்ப்பிணி மாணவி தற்கொலை முயற்சி
Tags:    

Similar News