உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்கள்

கனமழை எதிரொலி: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Published On 2021-12-01 02:39 GMT   |   Update On 2021-12-01 02:47 GMT
தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி:

வங்கக்கடலில், தெற்கு அந்தமான் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் எதிரொலியால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது இன்னும் சில மணி நேரங்களில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி பின் மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இதனால் மழை மற்றும் மழை பாதிப்பு காரணமாக, தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்.. டிசம்பர் 10 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு - குஜராத் அரசு அறிவிப்பு
Tags:    

Similar News