செய்திகள்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

மழையால் பாதிப்பு அடைந்த டெல்டா மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணம்

Published On 2021-11-15 23:41 GMT   |   Update On 2021-11-15 23:41 GMT
டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் சென்று பார்வையிட்டார்.
சென்னை:

சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மழைவிட்டும் வெள்ளநீர் வடியாத நிலை பல இடங்களில் இருக்கிறது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிடுவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரணம் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று நேரில் பார்வையிடுகிறார்கள் என அ.தி.மு.க. தலைமை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News