search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EPS"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவு செய்யவில்லை என குற்றச்சாட்டு.
    • 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்கும்படி நோட்டீஸ் விடுத்தேன்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவு செய்யவில்லை என ஈபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். தனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதால் ஈபிஎஸ் மீது தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதன்பிறகு, செய்தியாளர்களை சந்திதத் தயாநிதி மாறன் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு புறம்பாக எனது தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் நான் பயன்படுத்தாத பாராளுமன்ற உறுப்பினர் என்று கூறி அவதூறு பரப்பியுள்ளார்.

    24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்கும்படி எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்தேன். ஆனால், அதற்கு பதில் வரவில்லை. அதனால், ஈபிஎஸ் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்த வழக்கு அடுத்த மாதம் 14-ந்தேதி தேதி விசாரணைக்கு வருகிறது.

    தொகுதி நிதியில் சுமார் ரூ. 17 கோடியில் ரூ. 17 லட்சம் தான் மீதம் உள்ளது. தொகுதி நிதியை மத்திய சென்னை தொகுதி மக்களுக்காக செலவழித்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி தேர்தலில் அடையப்போகும் தோல்வியின் விரக்தியில் எனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். அவர் பேசுவது அவருக்கு புரிகிறதா? என்று தெரியவில்லை. ஏதோ வந்தோம் பேசினோம் தி.மு.க.வினரை தாக்கினோம் என்று அவர் பேசுகிறார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இதுவாகும்.
    • இட ஒதுக்கீடு கொள்கையை நிராகரிக்கும் பா.ஜ.க.வோடு பா.ம.க. கூட்டு வைத்திருப்பது ஒவ்வாத சந்தர்ப்பவாத கூட்டணியாகும்.

    பழனி:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பழனியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மக்கள் வாங்க முடியாத அளவுக்கு அனைத்து பொருட்களின் விலைவாசியும் அதிகரித்துள்ளது. வேலை இல்லா திண்டாட்டம் இந்தியா முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வழி தவறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் குறிப்பிடவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் ஆகியவை நாட்டுக்கு மிகுந்த ஆபத்தானது. நெல்லுக்கு நல்ல விலை விவசாயிகள் கேட்கிறார்கள். ஜி.எஸ்.டி. மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும். இது குறித்து பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லவில்லை. 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குவோம் என்றார்கள். அதனை நிறைவேற்றவில்லை.

    ஆனால் பா.ஜ.க. கடந்த ஆட்சியில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக அண்ணாமலை கூசாமல் பொய் சொல்லி வருகிறார். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா கூட்டணி நாடு முழுவதும் மகத்தான வெற்றி பெறும்.

    பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் ஆவலுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நாட்டின் அரசியல் சுதந்திரம் பாதுகாப்பாக இருக்காது.

    இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இதுவாகும். ஆனால் எடப்பாடி பழனிசாமி மோடி அரசைப்பற்றி எந்த விமர்சனமோ, கேள்வியோ கேட்பதில்லை. அந்த அளவுக்கு மோடியை கண்டு அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக நினைத்து அவரை மட்டுமே குறி வைத்து பேசி வருகிறார்.

    இட ஒதுக்கீடு கொள்கையை நிராகரிக்கும் பா.ஜ.க.வோடு பா.ம.க. கூட்டு வைத்திருப்பது ஒவ்வாத சந்தர்ப்பவாத கூட்டணியாகும். இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போய் விடும். டி.டி.வி. தினகரன் பக்கம் தொண்டர்கள் வந்து விடுவார்கள் என அண்ணாமலை பேசுகிறார். அ.தி.மு.க. தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அண்ணாமலைக்கு அ.தி.மு.க.வே கொடுத்து விட்டது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் உள்பட அனைவருமே அண்ணாமலைக்கு காவடி தூக்கியதன் விளைவு இன்றைக்கு அவர்களை ஏறி மிதிக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மின் கட்டணத்தை குறைக்க கோரி போராடி விவசாயிகளை திமுக அரசு சுட்டு வீழ்த்தியது.
    • ஏழை மாணவர்களை மருத்துவராக்கி பார்க்கும் கட்சி அதிமுக.

    சேலம் ஆத்தூர் ராணிப்பேட்டை திடலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தெய்வ சக்தி படைத்த கட்சி அதிமுக. அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பிரசார கூட்டம், அதிமுக மாநில மாநாடு போல் காட்சியளிக்கிறது.

    பிரசார கூட்டம், அதிமுக மாநில மாநாடு போல் காட்சியளிக்கிறது. அதிமுகவை விமர்சிக்கிறார்கள், இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள்.

    அதிமுகவை அழிக்க இந்த பூமியில் யாரும் இன்னும் பிறக்கவில்லை. அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்.

    அதிமுகவை விமர்சிக்கிறார்கள், இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள். மக்கள் செல்வாக்கு மிக்க கட்சி அதிமுக.

    பொய் வழக்குகள் போட்டு கட்சி பணியை முடக்க பார்க்கிறார்கள். திமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. மின் கட்டணத்தை குறைக்க கோரி போராடி விவசாயிகளை திமுக அரசு சுட்டு வீழ்த்தியது.

    திமுக ஆட்சியில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றன. நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் பொய் பிரசாரம் செய்கிறார்.

    காங்கிரசும், திமுகவும் நீட் தேர்வை கொண்டு வந்தது. முதலமைச்சர் திரும்ப திரும்ப பொய்யை பேசி, உண்மையாக மாற்ற முயற்சிக்கிறார்.

    அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டு வந்தேன். முதலமைச்சர் திரும்ப திரும்ப பொய்யை பேசி, உண்மையாக மாற்ற முயற்சிக்கிறார்.

    தமிழகத்தில் 4 முதல்வர்கள் ஆட்சி செய்கின்றனர். ஏழை மாணவர்களை மருத்துவராக்கி பார்க்கும் கட்சி அதிமுக. ஏழை மாணவர்களை மருத்துவராக்கி பார்க்கும் கட்சி அதிமுக. மதுரை எய்ம்ஸ் குறித்து திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அழுத்தம் தரவில்லை.

    அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கால்நடை பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. ஒற்றை செங்கல்லை தூக்கி கொண்டு அமைச்சர் உதயநிதி விளம்பரம் செய்கிறார். விவசாயிகளுக்கான திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது.

    விவசாயிகளுக்கான திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், முடக்கப்பட்ட திட்டங்கள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மக்களின் குறைகளை பெட்டி வைத்து வாங்கி சென்றவர்.
    • 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுகதான்.

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூரில் அரோக்கணம் அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

    அதிமுக ஆட்சியில் ராணிப்பேட்டையில் நிறைவேற்றப்பட்ட பணிகளை பட்டியலிட்டு வாக்கு சேகரிக்கப்பட்டது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் கண்ட கனவு மாறிவிட்டது.

    மக்களை ஏமாற்றியே திமுக ஆட்சிக்கு வந்தது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.

    வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அதிமுக அஞ்சாது. அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது வாடிக்கையாகிவிட்டது.

    எங்கள் ஆட்சியில் திமுக மீது வழக்கு போவில்லை. மக்கள் பணியாற்றினோம். திமுக எந்த திட்டங்களையும் கொண்ட வரவில்லை. திட்டங்களை கொண்டு வந்தால் தானே, நாங்கள் குறை கூற முடியும்.

    விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. மக்களை பற்றி சிந்திக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கிடைக்கும் நேரத்தில் மக்களக்கு பணியாற்ற வேண்டும்.

    எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மக்களின் குறைகளை பெட்டி வைத்து வாங்கி சென்றவர். பெட்டி தொலைந்துவிட்டதா அல்லது சாவி இல்லையா ?

    எதிர்க்கட்சியாக இருந்து எப்படி மத்திய அரசை எதிர்க்க முடியும். ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு எதிரான திட்டங்களை கண்டித்து குரல் கொடுப்போம். காவிரி நதிநீர் விவகாரத்தில் 22 நாட்கள் அவையை அதிமுக முடக்கியது.

    7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுகதான். நீட் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும். ஆனால், நீட் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது.

    நாங்கள் கட்டிய பாலத்தை ரிப்பன் வெட்டி திறப்பவர் முதல்வர் ஸ்டாலின். எங்கு பார்த்தாலும் போதைப் பொருள். தமிழகம் போதைப் பொருட்கள் விற்கும் மாநிலமாக மாறிவிட்டது. சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்துவிட்டது.

    தமிழகத்தில் கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, ஆனால் நீங்கள் நலமா ? என்கிறார் முதல்வர்.

    விவசாயிகளை பற்றி கவலைப்படாதவர்கள் திமுகவினர். அதிமுக ஆட்சியில் இருமுறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • பாமக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல்.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் பாமக எம்எல்ஏ அருள் சந்தித்துள்ளார்.

    மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக- பாமக இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    பாமக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    அன்புமணி மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
    • திமுகவை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க கோரிக்கை.

    போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகிய இருவர் மீது சென்னை மாநகர குற்றவியல் நீதிமன்றத்தில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    மனுவில், போதைப் பொருள் பறிமுதல், கைது தொடர்பான சமீப நிகழ்வுகளில் திமுகவை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரையும் மோடி பாராட்டி பேசினார்
    • 2024ல் அதிமுக தோற்றால் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பலாம் என்கின்றனர் விமர்சகர்கள்

    அடுத்த சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.

    கடந்த 2023 செப்டம்பர் மாத இறுதியில் பா.ஜ.க.வுடன் கொண்டிருந்த கூட்டணி, முறிவுக்கு வந்ததாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக அறிவித்தார்.

    இந்நிலையில் இன்று, தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள மாதப்பூரில், பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றினார்.

    அவர் தனது உரையில், அ.தி.மு.க.வின் முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரையும் தனித்தனியே பெயரை குறிப்பிட்டு பாராட்டி பேசினார்.

    தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவற்றுடன் கூட்டணி வைக்க இயலாத சூழ்நிலையில் பா.ஜ.க. இருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் உரை சில சந்தேகங்களை எழுப்புவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


    பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து எடப்பாடி தரப்பில் எவரையும் இதுவரை குறிப்பிட இயலவில்லை.

    2016ல் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை குறித்து ஏதும் கூறாமல் "ஜெயலலிதாவின் ஆட்சிதான் தமிழகத்தில் கடைசியாக நிலவிய நல்லாட்சி" என கூறியதன் மூலம், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளான அ.தி.மு.க. வாக்காளர்கள் மனதில், "நடைபெற போவது பிரதமருக்கான தேர்தல். அதில் அ.தி.மு.க.விற்கு வேட்பாளர் இல்லை என்பதால் மோடிக்கே வாக்களித்தால் என்ன?" எனும் சிந்தனை ஓட்டத்தை விதைக்க முனைகிறாரா என சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    தனது உரையில் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டா விட்டாலும், விமர்சிக்கவும் இல்லை என்பதை சுட்டி காட்டும் சில விமர்சகர்கள் மோடியின் வியூகம் இரண்டு விதமாக இருக்கலாம் என கருத்து தெரிவிக்கின்றனர்.


    ஒன்று, கூட்டணிக்கான கதவு இன்னமும் திறந்துதான் உள்ளது என உணர்த்தி அ.தி.மு.க.வை கூட்டணிக்கு அழைக்கும் முயற்சியாக இது இருக்கலாம்.

    மற்றொன்று, தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.வை அ.தி.மு.க. ஆதரிக்கலாம் எனும் கருத்தை விதைப்பதன் மூலம் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் அ.தி.மு.க.விற்கு கிடைப்பதை தடுத்து, தி.மு.க.விற்கே செல்ல வழிவகுத்து இத்தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைய வியூகம் வகுக்கிறாரா என சந்தேகம் எழுப்புகின்றனர்.

    இவ்வாறு நடந்தால் சட்டசபை, உள்ளாட்சி, இடைத்தேர்தல் என தொடர் தோல்வியை கண்ட எடப்பாடி பழனிச்சாமி மக்களவை தேர்தலிலும் தோல்வியடைந்தால், அவருக்கு எதிராக கட்சியில் எதிர்ப்பு கிளம்பி, அவர் பதவி விலக நேரிட்டு வேறொரு பா.ஜ.க. ஆதரவாளர் பதவி ஏற்கலாம், அல்லது கட்சியில் பிளவு ஏற்படலாம்.

    இதன் மூலம் அ.தி.மு.க. தேயத் தொடங்கலாம்.

    2026ல் தி.மு.க.விற்கு எதிராக பா.ஜ.க. மட்டுமே என சட்டசபை தேர்தல் களம் அமைய வழி பிறக்கலாம்.

    இவையனைத்தும் விமர்சகர்களின் கணிப்புகள்தான் என்றாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே பிரதமர் மோடி தமிழகத்தில் காய் நகர்த்த தொடங்கி விட்டதாகவே சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • போக்குவரத்து தொழிலாளர்களை ஏமாற்றும் ஆட்சி தான் திராவிட மாடல் அரசு.
    • சேலம் தி.மு.க. மாநாட்டில் இருக்கைகள் காலியாக கிடந்தன என தெரிவித்தார்.

    சேலம்:

    சேலத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் 15 லட்சம் பேர் திரண்டனர். ஆனால், சேலம் தி.மு.க. மாநாட்டில் இருக்கைகள் காலியாக கிடந்தன.

    நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து வாங்கிய பிரதிகள் மாநாட்டு திடலில் கிடந்தன. அவை குப்பைத்தொட்டிக்கு சென்றன. இவர்களா நீட் தேர்வை ரத்து செய்வார்கள். அவர்கள் ஏமாற்றுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்நிகழ்வு நீட் தேர்வில், தி.மு.க. எவ்வளவு அக்கறை செலுத்துகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் நாடகத்தை ஸ்டாலினும், அவரது மகனும் அரங்கேற்றுகின்றனர்.

    மக்களுக்கு உதவும் வகையில் தி.மு.க. தீர்மானங்களில் எந்த தீர்மானமும் இல்லை. திட்டமிட்டு மக்களையும் ஊடகத்தையும் ஏமாற்றும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது. அக்கட்சி அளித்த வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பொய் சொல்கின்றனர்.

    வெவ்வேறு கருத்துகள் கொண்ட கட்சிகள் தான் இண்டியா கூட்டணியில் இணைந்துள்ளன. அது எப்படி சரியாக இருக்கும்? அந்தக் கட்சிகள் இணைந்து செயல்படுவது கடினம். இன்னும் எத்தனை கட்சிகள் வெளியே செல்லும் என்பதைப் பார்ப்போம்.

    கோவில்களை கட்டி வாக்குகளைப் பெறலாம் என பா.ஜ.க. நினைக்கிறதா? ராமர் கோவில் கட்டியதால் பா.ஜ.க. எப்படி வெற்றி பெறமுடியும்?

    பாராளுமன்ற தேர்தலில் சூழ்நிலைக்கேற்ப கூட்டணி அமைக்கப்படும்.

    5 ஆயிரம் பஸ்கள் வாங்குவோம் என ஒவ்வொரு ஆண்டும் சொல்கின்றனர். ஆனால் ஒரு பஸ் கூட வாங்கியதாக தெரியவில்லை. போக்குவரத்து கழகம் முற்றிலும் செயலிழந்து காணப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களை ஏமாற்றும் ஆட்சி தான் திராவிட மாடல் அரசு. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பணி ஆரம்பமாகி உள்ளது என தெரிவித்தார்.

    • பாலிகடை பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் எடப்பாடி பழனிசாமி ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
    • 150க்கும் மேற்பட்ட பானைகளில் பிரம்மாண்டமாக முறையில் பொங்கல் விழா நடைபெற்றது.

    சேலம் மாவட்டத்தில் அதிமுக பொதுசெயலாளர் தனது தை பொங்கலை சிறப்பாக கொண்டாடினார். மக்கள் எடப்பாடி பழனிசாமியை மேளதாளத்துடன் ஓமலூர் பாலிகடை பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். வழி எங்கும் பெண்கள் மலர்தூவி உற்சாக வரபேற்பு அளித்தனர்.

    150க்கும் மேற்பட்ட பானைகளில் பிரம்மாண்டமாக முறையில் பொங்கல் விழா நடைபெற்றது.

    பொங்கல் விழாவில் போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    சேலம் திண்மங்கலம் பகுதியில் பொங்கல் விழாவை ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தைபொங்கல் போல தேர்தல் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற நேரம் வந்துவிட்டது, தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி பெற பாடுபட வேண்டும். மக்கள் நமது கூட்டணியை ஆதரிக்க வேண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கொடநாடு வழக்கில் சாட்சியங்களை பதிவுசெய்ய ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
    • இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    சென்னை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ் ஆகியோருக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2019-ல் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவும், வீடியோ வெளியிடவும் தடை விதிக்கும்படியும், ரூ.1.10 கோடி இழப்பீடும் கோரியிருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவுசெய்ய சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக ஜனவரி 30 மற்றும் 31ல் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜராக வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    மாஸ்டர் கோர்ட்டில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்களித்ததை எதிர்த்த மேத்யூ சாமுவேலின் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    • பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
    • திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.செல்வம், பதிவாளர் (பொறுப்பு) லெ.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.

    பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் கூறியதாவது:-

    பிரதமரிடம் அரசியல் பேசவில்லை, மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.

    நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றிய 10 ஆண்டு காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    உலக நாடுகள் நம் இந்தியாவின் முன்னேற்றத்தை கண்டு பிரம்மித்து இருக்கிறது.

    பாஜகவுடன் இணைந்து பணியாற்ற நல்ல சூழல் உள்ளது.

    ஈபிஎஸ் குறித்த ரகசியத்தை தற்போது வெளியே சொல்ல இயலாது தெரிய வேண்டிய நேரத்தில் வெளியே வரும்.

    கொடநாடு சம்பவம் நடைபெற்ற போது, நாங்கள் ஈபிஎஸ் உடன் இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    • சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை.

    முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தனது காரில் ஏறி, அங்கிருந்து கிளம்ப முற்பட்டார்.

    அப்போது, அங்கிருந்தவர்களில் சிலர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் அவரது காரை நோக்கி கற்கள் மற்றும் காலணிகளை வீசினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு கற்கள் மற்றும் காலணிகளை வீசியர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமிக்கு அரங்கேறிய தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓ. பன்னீர்செல்வம், "நான் எனது சமூக வலைதள பதிவுகளின் மூலம் அறிவுறுத்தி இருந்தேன். பசும்பொன் எனும் புண்ணிய பூமிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தொந்தரவையோ, துயரத்தையோ கொடுக்கக்கூடாது என்பது என் வேண்டுகோளாக உள்ளது என குறிப்பிட்டு இருந்தேன். இது போன்ற சம்பவம் நடந்திருக்கக்கூடாது," என்று தெரிவித்தார்.

    ×