செய்திகள்
கஞ்சா செடி பயிரிட்ட தந்தை-மகன் கைது
பென்னாகரத்தில் வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்ட தந்தை, மகனை கைது செய்த போலீசார் கஞ்சா செடிகளை அழித்தனர்.
பென்னாகரம்:
பென்னாகரம் மூட்டைகார தெருவை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் (வயது 65). இவரது மகன் கார்த்திகேயன் (28). இவர்கள் வீட்டின் பின்புறம் கஞ்சா செடியை வளர்த்து வருவதாக பென்னாகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டு தோட்டத்தில் பூச்செடிகளுடன் ஊடுபயிராக சேர்த்து கஞ்சா செடியை பயிரிட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அய்யம்பெருமாள், இவரது மகன் கார்த்திகேயன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர். வீட்டில் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா செடியை பறிமுதல் செய்யப்பட்டது.
பென்னாகரம் மூட்டைகார தெருவை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் (வயது 65). இவரது மகன் கார்த்திகேயன் (28). இவர்கள் வீட்டின் பின்புறம் கஞ்சா செடியை வளர்த்து வருவதாக பென்னாகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டு தோட்டத்தில் பூச்செடிகளுடன் ஊடுபயிராக சேர்த்து கஞ்சா செடியை பயிரிட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அய்யம்பெருமாள், இவரது மகன் கார்த்திகேயன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர். வீட்டில் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா செடியை பறிமுதல் செய்யப்பட்டது.