செய்திகள்
கைது

கஞ்சா செடி பயிரிட்ட தந்தை-மகன் கைது

Published On 2021-11-10 09:57 GMT   |   Update On 2021-11-10 09:57 GMT
பென்னாகரத்தில் வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்ட தந்தை, மகனை கைது செய்த போலீசார் கஞ்சா செடிகளை அழித்தனர்.
பென்னாகரம்:

பென்னாகரம் மூட்டைகார தெருவை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் (வயது 65). இவரது மகன் கார்த்திகேயன் (28). இவர்கள் வீட்டின் பின்புறம் கஞ்சா செடியை வளர்த்து வருவதாக பென்னாகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டு தோட்டத்தில் பூச்செடிகளுடன் ஊடுபயிராக சேர்த்து கஞ்சா செடியை பயிரிட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அய்யம்பெருமாள், இவரது மகன் கார்த்திகேயன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர். வீட்டில் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா செடியை பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News