செய்திகள்
விபத்து

கருமத்தம்பட்டி அருகே கார் மீது மொபட் மோதி 7 வயது சிறுவன் பலி - தீபாவளி அன்று சோகம்

Published On 2021-11-05 13:04 GMT   |   Update On 2021-11-05 13:04 GMT
கருமத்தம்பட்டி அருகே தீபாவளி பண்டிகை அன்று 7 வயது சிறுவன் இருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருமத்தம்பட்டி:

கருமத்தம்பட்டி அடுத்த முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 37). இவர் முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இவர் தனது மனைவி ரம்யா (30) மற்றும் மகன்கள் பிரணவ் (7), சாய் (2) ஆகியோரை அழைத்து கொண்டு மொபட்டில் தீபாவளி பண்டிகைக்காக குன்னத்தூர் பகுதியில் உள்ள மனைவி ரம்யாவின் தாயார் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

அப்போது திருப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவன வாகன டிரைவர் சண்முகம் (54) என்பவர் அவரது நிறுவன காரில் சேலம்- கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கணியூர் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. உடனே அவர் சாலையோரத்தில் காரை நிறுத்தி போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் சிவக்குமார் ஓட்டிவந்த மொபட் திடீரென கட்டுப்பாட்டை இழந்து காரின் பின்புறம் மோதியது. இதில் இவரது மகன் பிரணவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிவகுமார் மற்றும் மனைவி ரம்யா, சாய்க்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிறுவன் பிரணவ் பரிதாபமாக உயிர் இழந்தார். இதனையடுத்து காயம் அடைந்த சிவகுமார், ரம்யா, சாய் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்தும் சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News