செய்திகள்
கொலை

மணலியில் ரவுடி வெட்டிக் கொலை

Published On 2021-10-12 10:16 GMT   |   Update On 2021-10-12 10:16 GMT
மணலியில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர்:

மணலி, எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குட்டி என்ற ராஜசேகர் (வயது 26). பிரபல ரவுடி.

இந்த நிலையில் நேற்று இரவு ராஜசேகர், சின்னசேக்காடு அருகே பார்த்தசாரதி 6-வது தெருவில் மணலி பகுதியைச் சேர்ந்த சிலருடன் மது குடித்ததாக தெரிகிறது.

மதுபோதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவளால் குட்டியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் தலை, முதுகில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த குட்டி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்து அப்பகுதிமக்கள் மணலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் தலைமையில் போலீசார் விரைந்து வந்து குட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே கொலை தொடர்பாக சந்தேகத்திற்கிடமாக சிலரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கொலை செய்யப்பட்ட குட்டி கடந்த 2018-ம் ஆண்டு கோபால் என்பவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News