செய்திகள்
மாரியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
மாரியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் அருகே ஒண்டிக்கடை கிராமத்தில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் உண்டியலை எடுத்து வெளியில் வந்தனர். பின்னர் உண்டியலில் இருந்த பணத்தை திருடி கொண்டு உண்டியலை அங்கேயே போட்டு விட்டு சென்றனர். இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் மங்களபுரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலகவதி கோவில் உண்டியலில் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.