செய்திகள்
பாளையில் கோலம் போட்ட பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
பாளையில் கோலம் போட்ட பெண்ணிடம் 4 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை ரகுமத்நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 55). இவர் காலையில் வீட்டு முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் திடீரென்று மாரியம்மாள் கழுத்தில் கிடந்த 4 புவுன் தங்கநகையை பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து மர்மநபரை பிடிக்க முயன்றனர். எனினும் அவர் நகையுடன் தப்பி சென்றுவிட்டார்.
இது குறித்து பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.