செய்திகள்
மாணவி மாயம்

நன்னிலம் அருகே கல்லூரி மாணவி மாயம்- தந்தை போலீசில் புகார்

Published On 2021-09-23 10:28 GMT   |   Update On 2021-09-23 10:28 GMT
நன்னிலம் அருகே கல்லூரி மாணவி மாயமானதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
நன்னிலம்:

நன்னிலம் அடுத்துள்ள திருக்கொட்டாரம் தெற்கு தெரு முருகன் மகள் ஸ்டெல்லா (வயது 19), இவர் நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பிபிஏ மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் கல்லூரிக்கு, வந்தவர்.

மாலையில் வீடு திரும்பவில்லை, பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும், கிடைக்காத நிலையில், தனது மகளை பாண்டிச்சேரியை சேர்ந்த கோட்டை பாக்கம், பைசல் என்பவர் அழைத்துச் சென்றிருக்கலாம், என்ற சந்தேகத்தின் பேரில் பேரளம் போலீசில் முருகன் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News