செய்திகள்
கயத்தாறு அருகே ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பலி
கயத்தாறு அருகே ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கயத்தாறு:
கொடைக்கானல் அண்ணா நகரை சேர்ந்த செல்வம் மகன் கோவிந்தசாமி (வயது 28). இவர், நேற்று மாலை 3 மணி அளவில் மாமனார் ஊரான கயத்தாறு அருகிலுள்ள வில்லிசேரியிலிருந்து ஒரு ஆட்டோவில் அவரும், உறவினர்களும் சூரியமினிக்கனில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றனர்.
வடக்கு இலந்தைகுளம் அருகே சென்றபோது, ஆட்டோ ரோட்டில் நிலைதடுமாறி தலைகீழாக கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த கோவிந்தசாமி சம்பவ இடத்தில் பலியானார். மேலும், கொடைக்கானலை சேர்ந்த மகேஸ்வரி(47), அவரது கணவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் காயமடைந்தனர். இந்த 2 பேரும் நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கொடைக்கானல் அண்ணா நகரை சேர்ந்த செல்வம் மகன் கோவிந்தசாமி (வயது 28). இவர், நேற்று மாலை 3 மணி அளவில் மாமனார் ஊரான கயத்தாறு அருகிலுள்ள வில்லிசேரியிலிருந்து ஒரு ஆட்டோவில் அவரும், உறவினர்களும் சூரியமினிக்கனில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றனர்.
வடக்கு இலந்தைகுளம் அருகே சென்றபோது, ஆட்டோ ரோட்டில் நிலைதடுமாறி தலைகீழாக கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த கோவிந்தசாமி சம்பவ இடத்தில் பலியானார். மேலும், கொடைக்கானலை சேர்ந்த மகேஸ்வரி(47), அவரது கணவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் காயமடைந்தனர். இந்த 2 பேரும் நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.