செய்திகள்
கொரோனா பரிசோதனை

நேற்றைவிட குறைந்தது- தமிழகத்தில் இன்று 1604 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-08-23 14:10 GMT   |   Update On 2021-08-23 14:10 GMT
தமிழகம் முழுவதும் இன்று 1863 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள், பூங்காக்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 1604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1630 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 26.02 லட்சமாக உயர்ந்துள்ளது. 

இன்று ஒரே நாளில் 25 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மொத்த உயிரிழப்பு 34734 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 1863 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 18887 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 172 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 195 பேருக்கும், ஈரோட்டில் 143 பேருக்கும், செங்கல்பட்டில் 94 பேருக்கும், தஞ்சாவூரில் 104 பேருக்கும், திருப்பூரில் 68 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News