செய்திகள்
நகை பறிப்பு

சின்னசேலம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 7½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு

Published On 2021-08-22 12:45 GMT   |   Update On 2021-08-22 12:45 GMT
சின்னசேலம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 7½ பவுன் தாலி சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்:

சின்னசேலம் அருகே உள்ள வி.கூட்டுரோடு பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவருடைய மனைவி புவனேஸ்வரி (வயது 22). நேற்று முன்தினம் இரவு சிலம்பரசன் தனது குடும்பத்துடன் வீட்டில் படு்த்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் புவனேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகையை பறித்துச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News