செய்திகள்
மதுக்கூரில் பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு
மதுக்கூரில் பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுக்கூர்:
மதுக்கூர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது62). இவரது மனைவி மாலா (54). இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு மாலா வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்தார். சாமிநாதன் வீட்டின் வெளிப்புறம் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் உள்ளே நுழைந்த மர்மநபர்கள் மாலா கழுத்தில் கிடந்த 8 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சாமிநாதன் மதுக்கூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.