செய்திகள்
திருட்டு

கம்பத்தில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

Published On 2021-07-17 12:44 GMT   |   Update On 2021-07-17 12:44 GMT
கம்பத்தில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம்:

கம்பம் சி.எம்.எஸ். நகரை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 50). இவர் கம்பம் நகராட்சி எதிரே மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கல்லாவில் வைத்திருந்த ரூ.2 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயசீலன் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News