செய்திகள்
கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது

Published On 2021-07-14 09:52 GMT   |   Update On 2021-07-14 09:52 GMT
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நன்னிலம்:

பேரளம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இது குறித்து நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News