செய்திகள்
சோளிங்கர் அருகே தூக்குப்போட்டு கட்டிட தொழிலாளி தற்கொலை
சோளிங்கர் அருகே தூக்குப்போட்டு கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த ரெண்டாடி ஊராட்சிக்கு உட்பட்ட கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலைக்குச் சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்பினார். அவர், மனைவியை சாப்பாடு போடுமாறு கேட்டுள்ளார். மனைவி சிறிது நேரம் இருக்குமாறு கூறினார். இதனால் மனவேதனையடைந்த கோவிந்தராஜ் வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரின் மகன் தினகரன் (30) சோளிங்கர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.