செய்திகள்
கைது

அனுமதி இன்றி டிப்பர் லாரியில் ஜல்லி ஏற்றி வந்தவர் கைது

Published On 2021-07-10 14:44 GMT   |   Update On 2021-07-10 14:44 GMT
அனுமதி இன்றி டிப்பர் லாரியில் ஜல்லி ஏற்றி வந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):

சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் டிப்பர் லாரியில் அனுமதி இன்றி ஜல்லியை ஏற்றிக்கொண்டு, ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த ராணிப்பேட்டை போலீசார், சுரேசை கைது செய்தனர். அவரிடமிருந்து டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News