செய்திகள்
குடியாத்தம் அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி
குடியாத்தம் அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
குடியாத்தம்- காவனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 40 மதிக்கத்தக்க ஒருவர் அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு உடல் துண்டாகி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மனோகரன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலிசார் வழக்குப் பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர். நீல நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் மஞ்சள் நிறத்தில் அரை கை சட்டை அணிந்துள்ளார்.