செய்திகள்
தற்கொலை

ஒரத்தநாடு அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை

Published On 2021-07-02 11:00 GMT   |   Update On 2021-07-02 11:00 GMT
பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கோட்டாச்சியர் வேலுமணி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (35) வழக்கறிஞர்.

இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை தாலுக்கா, உக்கடை பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள்-மயிலம்மாள் இவர்களது மகள் ஜெயலட்சுமி (31) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஜெயலட்சுமிக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை ஜெயலட்சுமி அவரது தாய் மயிலம்மாளிடம் ஏதோ மனக்கவலை இருப்பதாக பேசி கொண்டு இருந்துள்ளார். பின் வீட்டில் பின்புறம் சென்றவர் நீண்ட நேரமாகியும் வராததால் அவரது வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது ஜெயலட்சுமி தூக்கில் தொங்கியது தெரிய வந்தது உடனே அவரை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் தகவல் அறிந்த போலீசார்கள் கோட்டாச்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர் வருவதற்கு தாமதமானதால் பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கோட்டாச்சியர் வேலுமணி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க டி.எஸ்.பி. சுனில் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News